7 25
இலங்கைசெய்திகள்

சர்ச்சையாக உருவெடுத்த நாமலின் சட்டப் பரீட்சை: வழங்கப்பட்ட பதில்

Share

சர்ச்சையாக உருவெடுத்த நாமலின் சட்டப் பரீட்சை: வழங்கப்பட்ட பதில்

சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் போதே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சட்ட விசாரணையில் நாமல் ராஜபக்ஷ விசேடமாக நடத்தப்பட்டதாகக் கூறி உரிய முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பரீட்சையின் போது, நாமல் ராஜபக்ச அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, இந்த விடயத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் ஜமுனி கமந்த துஷார வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள நாமல், தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஏனைய குற்றச்சாட்டுகளைப் போன்று இதுவும் அரசியல் இலாபங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் இது இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...