6 43
இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

Share

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய மனோ கணேசன் (Mano Ganesan), நிசாம் காரியப்பர் (Nisam Kariyappar), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மொஹமட் இஸ்மாயில் (Mohamed Ismail) ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி ஜகத் விக்ரரத்னவின் (Jagath Wickramarathne) பெயர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்க்கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஹினி கவிரத்னவின் (Rohini Kavirathna) பெயரை பரிந்துரைக்க எதிர்க்கட்சி தயாராகி வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்த நிலையில் ஏனைய நால்வரின் பெயரும் கடந்த 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...