23 9
இலங்கைசெய்திகள்

சிரிய இராணுவ தள விவகாரம் : புதிய நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா

Share

சிரிய இராணுவ தள விவகாரம் : புதிய நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா

சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா (Russia) நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன.

சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சிரியாவிற்குள் தனது இராணுவ தளங்களை பராமரிப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ் கூறிய கருத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், சிரியாவில் உள்ள தூதர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒழுங்கை பராமரிப்பு நடவடிக்கைகளை தமது நாடு நிறைவேற்றும் என ரஷ்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இஸ்லாமிய அரசில் இருந்து பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் சிரியர்களின் வேண்டுகோளின் பேரில் தமது நாட்டு படைவீரர்கள் கலந்துகொண்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா தற்போது சிரியாவில் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது அவை டார்டஸில் ஒரு கடற்படைத் தளம் மற்றும் லதாகியா துறைமுக நகருக்கு அருகிலுள்ள கெமிமிம் விமானத் தளம் என்பனவாகும்.

சிரியாவில் பஷர் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவுக்குப் பிறகு தோன்றிய மிகவும் சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழுவாக நுஸ்ரா முன்னணி என்ற பெயரில் அதிகாரபூர்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சன்னி இஸ்லாமிய போராளிப் பிரிவு பல மேற்கத்திய சக்திகளால் பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஐ நீக்க முடியும் என்று இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்தில் கூறியமை கூறியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...