18 16
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களின் சீருடை- கல்வி அமைச்சின் அறிவிப்பு

Share

பாடசாலை மாணவர்களின் சீருடை- கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் ( Ministry of Education) செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது. அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் பாடசாலை சீருடை துணி வழங்கப்படும்.

2023 ஆம் ஆண்டில், மொத்தம் 4,585,432 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றிருந்த நிலையில், 70 சதவீத சீருடைகள் சீனாவால் மானியமாக வழங்கப்பட்டன, மீதமுள்ள 30% உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ. 2,493,762 மில்லியன் செலவில் பெறப்பட்டது.

அத்தோடு, 2024 இல், 4,559,420 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றதோடு, 80 சதவீத துணி (9,259,259 மீட்டர்) சீனாவால் மானியமாக வழங்கப்பட்டது, அதன் மதிப்பு ரூ. 5,317 மில்லியன் ஆகும்.

எஞ்சிய 20% (1,938,399 மீற்றர்) இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் லிமிடெட் மூலம் மானியமாக, அமைச்சரவை அனுமதியுடன், ரூ. 970 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...