6 27
உலகம்செய்திகள்

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

Share

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

சூடானில் (Sudan) உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டு வீச்சில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் அங்கு ஆட்சியை நடத்தி வருகிறார்.

துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதி ஜெனரல் படக் அல்- பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.

இதற்கு துணை இராணுவ படையின் அதிவிரைவு ஆதரவுபடையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

2022 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போராக மாறி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள கிராமங்களை துணை இராணுவ படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இராணுவ ஆட்சியினைக் கவிழ்க்க சதிசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களை குறிவைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு துணை இராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...