0
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கு அநுர அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

வாகன இறக்குமதியாளர்களுக்கு அநுர அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுப்பாடுகளுடன் கூடிய வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்ற அதேவேளை, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

“ஒரு அரசாங்கம் என்ற வகையில், வாகன இறக்குமதி தொடர்பான முடிவுகளை நாங்கள் கவனமாக அணுகுகிறோம், நமது இருப்பு மற்றும் நமது பொருளாதாரத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

 

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...