23 5
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் நயினை தமிழர்களின் கூட்டு முயற்சி: நயினாதீவு வைத்தியசாலைக்கு கிடைத்த சாதனம்,

Share

புலம்பெயர் நயினை தமிழர்களின் கூட்டு முயற்சி: நயினாதீவு வைத்தியசாலைக்கு கிடைத்த சாதனம்,

நயினாதீவிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களின் கூட்டு முயற்சியின் பயனாக சேர்க்கப்பட்ட பணத்தின் மூலம் ரூபா ஒரு கோடி பெறுமதியான அல்ட்ரா சவுண்ட்ஸ்கானிங் இயந்திரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (07.12.2024) கையளிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் அவசர தேவையான ஸ்கானர் இயந்திரம் வாங்குவதற்கு ஜேர்மனியில் வசிக்கும் ஜெசிந்தா வாசன் மூலம் 75 இலட்சமும், நோர்வேயில் இயங்கும் நயினை மக்கள் அறக்கட்டளை மூலம் 20 இலட்சமும் ஒதுக்கப்பட்டது.

குறித்த இயந்திரம் இன்று (07/12/2024) சனிக்கிழமை நன்கொடையாளர்களால் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரிடம் நயினாதீவு வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு இந்த இயந்திரம் வழங்கப்பட்டமையானது வரவேற்கத்தக்கது எனவும் நயினாதீவில் வாழும் மக்களுக்கு கிடைத்த பேருதவி என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மேலும் பல உதவிகள் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ளதாக நயினை மக்கள் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...