19 9
இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

Share

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏழு சட்டவிரோத மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால(Tilak Dhanapala) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களை கைது செய்வதற்கு வசதியாக அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நபர்கள் குறித்த அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த ஏழு நிகழ்வுகளில் நான்கு நிகழ்வுகள் பருத்தித்துறை(point pedro) பிரதேசத்திலும், இரண்டு கிளிநொச்சியிலும்(kilinochchi), ஒன்று யாழ்ப்பாணத்திலும்(jaffna) இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் காணொளிப் பதிவுகள் மற்றும் தகவலறிந்தவர்கள் மூலம் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிடியாணையை பெறுவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களிலும் காவல்துறையினர் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால்( Shivajilingam) ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...

images 17
செய்திகள்இலங்கை

கந்தானையில் பரபரப்பு: திருடிய லொறியுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரால் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் – ஒருவர் பலி, 4 பேர் காயம்!

கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் நேற்று (நவ 15) இரவு, திருடப்பட்ட லொறி...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதல்: ஒரு படகு மூழ்கியது – மீனவர் வைத்தியசாலையில்!

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற...

grads
செய்திகள்இலங்கை

கல்வி, உயர் கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன்: 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – நவம்பர் 30 கடைசித் திகதி!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின்...