15 5
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Share

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அண்மைய நாட்களாக தொடர்ந்து வந்த காலநிலை மாற்றங்களினால் இலங்கையில் உப்புத் தொழிலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கடும் மழை மற்றும் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருக்குணமலையில் உள்ள குச்சவெளி உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உப்பு உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, உப்பு நுகர்வு மிக அதிகமாக இருக்கும் நாடு இலங்கை ஆகும், கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இலங்கையில் தனிநபர் உப்பு நுகர்வு 11.3 கிராம் ஆகும்.

இவ்வாறனதொரு பின்னணியில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு தேவை என்பது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை. ஆனால் எமது நாட்டில் உப்பின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு 125,000 – 150,000 மெட்ரிக் தொன்களுக்கு இடையில் உள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுமார் இருபதாயிரம் மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....