10 4
சினிமாசெய்திகள்

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

Share

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை– 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் புகழ் பெற்று வருகிறார்.

தமன்னா ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்த்ரி 2’ படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.

இவர் நடனமாடும் படங்கள் தொடர்ந்து வசூலில் வெற்றி பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் தமன்னாவை அவர்கள் படத்திற்காக ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதனால் சற்று வருத்தமடைந்த தமன்னா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

ரஜினி படம் என்பதால் தான் ஜெயிலர் படத்தில் ஆடினேன். ‘ஸ்த்ரி 2’ படத்தின் இயக்குனர் எனது நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன். அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...