10 4
சினிமாசெய்திகள்

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

Share

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை– 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் புகழ் பெற்று வருகிறார்.

தமன்னா ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்த்ரி 2’ படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.

இவர் நடனமாடும் படங்கள் தொடர்ந்து வசூலில் வெற்றி பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் தமன்னாவை அவர்கள் படத்திற்காக ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதனால் சற்று வருத்தமடைந்த தமன்னா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

ரஜினி படம் என்பதால் தான் ஜெயிலர் படத்தில் ஆடினேன். ‘ஸ்த்ரி 2’ படத்தின் இயக்குனர் எனது நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன். அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...