29 4
இலங்கைசெய்திகள்

குறைந்த விலையில் அரசாங்கத்தின் ஊடாக தேங்காய் விற்பனை

Share

குறைந்த விலையில் அரசாங்கத்தின் ஊடாக தேங்காய் விற்பனை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது, “தேங்காய் உற்பத்திக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவன அமைப்பு உள்ளது.

அரசாங்க தோட்டங்களில் இருந்து நகர மக்களுக்கு 130 ரூபாய்க்கு தேங்காய் பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்தோடு, அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 220 ரூபா விலையில் இரண்டு இலட்சம் கிலோகிராம் அரிசியை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளனர்” என அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...

articles2FBeZFwQ6t4jz5lsonfdUc
செய்திகள்இலங்கை

நுவரெலியா வெள்ளம்: 21 வெளிநாட்டவர்கள் விமானப்படையின் MI-17 ஹெலிகொப்டர் மூலம் துரிதமாக மீட்பு!

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் (Severe Floods) இடம்பெயர்ந்து சிக்கித் தவித்த 21 வெளிநாட்டவர்கள்,...

articles2FWdcbeAlRn6LMdiTyRA63
செய்திகள்இலங்கை

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை  முறைமைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை...

images 9
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில்...