6 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

Share

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை ஒரு கட்சி என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை உள்ளது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) கேள்வியெழுப்பியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்தது தவறாக நடந்துள்ளது. ஒரு நாடாக நாம் இன்று ஜனநாயகம் தொடர்பில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில்(sri lanka) இருந்து உகாண்டாவுக்கு(uganda) ராஜபக்ச குடும்பம்(rajapaksa family) பணம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி, மக்களின் மனதை சிதைத்து, மக்கள் உள்ளங்களில் வெறுப்பை விதைத்தனர்.

ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறுப்பை விதைத்து, 75 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன(jvp) இப்போது சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குகிறது.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை கட்சி ரீதியாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சமூக ஊடக ஆர்வலர்களின் கைது முற்றிலும் தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்காக இப்படிச் செய்ததற்காக  இலங்கை காவல்துறை வெட்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் உரிமை என்ன என்பதை அவர்கள் மனசாட்சியுடன் கேட்க வேண்டும். மேலும் இது மிகவும் சோகமான மற்றும் தவறான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...