16
இலங்கைசெய்திகள்

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

Share

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோரப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழுவில் சிலர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை புறக்கணிப்பதற்கு தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...

16 3
செய்திகள்உலகம்

பிரித்தானிய குடிவரவு விதிகளில் அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட 4 நாடுகளுக்கு விசா வழங்க தடை!

பிரித்தானியாவிற்கு மாணவர் விசா மற்றும் பணியாளர் விசா மூலம் வந்து தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த...

15 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல்: நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பான...

14 3
செய்திகள்உலகம்

தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் ஊடுருவல்: கியாம் நகரில் தீவிர எறிகணைத் தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனான் எல்லையைக் கடந்து தரைவழியாக முன்னேறி வருவதாக லெபனான் அரச ஊடகங்களை...