3
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

Share

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

கொழும்பு – பொல்காசோவிட பிரதேசத்தில் கார் பழுதுபார்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லேண்ட் ரோவர் ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன பழுதுபார்க்கும் இடத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேச விகாரை விஹாராபதி ஒருவர் இந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை வழங்கி சென்றதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வாகனத்தை திருத்துவதற்கான தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர் என கூறப்படும் விஹாராபதி அவ்வப்போது வந்து வழங்கி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வாகனத்தை வழங்கியதாக கூறப்படும் விகாரை விஹாராபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ​​குறித்த ஜீப் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...