4 60
இலங்கைசெய்திகள்

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

Share

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெள்ள நீர் வழிந்தோடாமையால் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 11 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 11 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி உட்பட சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...