இலங்கைசெய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Share

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Maithri Appeared Bribery And Corruption Commission
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

றோயல் பார்க் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நபர் ஒருவர் சமர்ப்பித்த மனு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதனை தொடர்ந்து, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 ஆம் திகதியன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அத்தோடு, ஒக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...