ஏனையவை

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Share

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Sri Lankan Airlines Brought Under Govt Control

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை விவரிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை வழங்கினார்.

அனைத்து இலங்கையர்களும் பெருமைகொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும் அது இலங்கையர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தியதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தவிசாளர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நஷ்டத்தைக் குவித்து வரும் விமான நிறுவனத்தை ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்னாள் ஆட்சியின் திட்டங்களை அரசாங்கம் தற்போது துக்கியெறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...