16 24
உலகம்செய்திகள்

பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் : புடினின் அறிவிப்பால் பதற்றத்தில் உலகம்

Share

பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் : புடினின் அறிவிப்பால் பதற்றத்தில் உலகம்

உக்ரைனுக்கு(ukraine) உதவும் பிரிட்டன்(uk) உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா(russia) மற்றும் உக்ரைன் இடையே நேட்டோ விவகாரத்தில் 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா(us) தனது ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல் ரஷ்யாவுக்கு பின்னால் வடகொரியா(north korea) இருந்து கொண்டு ஆயுதங்கள், வீரர்களை அனுப்பும் வேலைகளை செய்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன்பு உக்ரைன், ரஷ்யா மீது நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவியது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தன்னிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் 3 ஆம் உலக போரே ஏற்படும் நிலை உருவானது. ஆனால் போரை நிறுத்தும் எண்ணம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(viadimir putin) ஆகியோருக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு உதவும் பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளை ரஷ்யா பகைத்து உள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி சைபர் தாக்குதல் தொடங்கினால் உலக அளவில் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...