6 45
இலங்கைசெய்திகள்

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடமிருந்து (Sujeewa Senasinghe) கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID)உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

100 மில்லியன் ரூபா பிணை அடிப்படையில் குறித்த சொகுசு வாகனத்தை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சொகுசு வாகனம் நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான காரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

காரணிகளை பரிசீலித்த கோட்டை நீதவான், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால், சம்பவம் தொடர்பான வழக்கை இன்றைய தினம் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...