24 3
ஏனையவை

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

Share

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.14% வீதத்துடன் 350,429 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தேசியப்பட்டியல் தொகுதிக்கான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆசனங்களுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சானக மதுகொட காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...