24 3
ஏனையவை

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

Share

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.14% வீதத்துடன் 350,429 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தேசியப்பட்டியல் தொகுதிக்கான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆசனங்களுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சானக மதுகொட காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...