13 13
ஏனையவை

தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர்

Share

தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர்

தீவிர அரசியலில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை வெலிகம அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம(Rehan Jayawickrama) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (sajith premadasa)அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் மிகவும் கடினமான பயணத்தை கடந்து வந்தாலும், தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் குடும்பம் மற்றும் அவர்களுக்காக உழைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த முடிவு மிக எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் அது சரியான முடிவு என இப்போது உணரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வெலிகம மாநகர சபையின் மேயராக பணியாற்றிய இவர், இம்முறை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...