6 32
ஏனையவை

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்…! சி.வி.கே.சிவஞானம் தகவல்

Share

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்…! சி.வி.கே.சிவஞானம் தகவல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடியே யாரை நியமிப்பது என இறுதி முடிவு எடுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (16.10.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை.

இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும் என நான் நம்புகின்றேன். அதேநேரத்தில் இப்போது வரையில் யாரையும் யாரும் தீர்மானித்ததாகவும் எனக்குத் தெரியவும் இல்லை.

எனினும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் வேறு எவரும் யாருடனேயும் ஏதும் பேசியிருக்கின்றார்களோ என்றும் தெரியவில்லை.

ஆனாலும், கட்சியைப் பொறுத்த வரையில் இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கட்சியின் அரசியல் குழு கூடி இந்த நியமனம் தொடர்பில் நிச்சயம் ஒரு முடிவு எடுக்கும் என சி.வி.கே. குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்குப் போக மாட்டேன் என்றும், அவ்வாறு தேசியப் பட்டியல் மூலமாகச் செல்வதற்குத் தனக்கு விருப்பம் இல்லை என்றும் சுமந்திரன் தெளிவாகத் தன்னிடம் சொல்லியுள்ளார் என்று சி.வி.கே.சிவஞானம் (CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...