4 23
ஏனையவை

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

Share

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

தேசிய மக்கள் சக்தி தரப்பினால் பெண்களின் திருமண வயது 18ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டமையானது பெண்களின் பாதுகாப்புக்காகவே என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக உள்ள சரோஜா போல்ராஜ் 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார். எனினும், ஏனைய அரசியல் கட்சிகள் இதனை தேசிய மக்கள் சக்திக்கு இனவாத சாயம் பூச பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பொன்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...