4 23
ஏனையவை

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

Share

அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட இனரீதியான குற்றச்சாட்டு: அநுர தரப்பு பதிலடி

தேசிய மக்கள் சக்தி தரப்பினால் பெண்களின் திருமண வயது 18ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டமையானது பெண்களின் பாதுகாப்புக்காகவே என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக உள்ள சரோஜா போல்ராஜ் 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார். எனினும், ஏனைய அரசியல் கட்சிகள் இதனை தேசிய மக்கள் சக்திக்கு இனவாத சாயம் பூச பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பொன்று ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...