19 5
இலங்கைசெய்திகள்

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

Share

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

தனியார் துறையில் சேவையில் ஈடுபடும் வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கட்டாயம் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் பெறுபெறுகள் வெளியானவுடன் பொது இடங்களில் ஒன்று கூடி, பட்டாசு கொளுத்துவது சட்டத்தின் பிரகாரம் குற்றச்செயலாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமையில் ஈடுபடாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...