15 7
இலங்கைசெய்திகள்

மியான்மாரின் இணையக் குற்றங்களில் தொடர்ந்தும் இணைக்கப்படும் இலங்கையர்கள்..!

Share

மியான்மாரின் இணையக் குற்றங்களில் தொடர்ந்தும் இணைக்கப்படும் இலங்கையர்கள்..!

மியான்மாரில் (Myanmar) உள்ள இணையக் குற்ற முகாம்களுக்கு தொடர்ந்தும் இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாட்டவர்கள், குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பவர்கள், அதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள், அதிக சம்பளம் தரும் தொழில்கள் தொடர்பில் பொய்யாக வாக்களிக்கும் மனித கடத்தல்காரர்களால் குறிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் துபாய் போன்ற இடங்களுக்கு நேர்காணலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதன் பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு மியான்மாரில் சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற நடவடிக்கைகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த சைபர் கிரைம் முகாம்களில் உள்ளவர்கள், மன மற்றும் கொடூரமான உடல் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சுற்றுலா விசாவில் வெளிநாட்டு தொழில்களை தவிர்க்குமாறும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 0112102570 மற்றும் 076 844 7700 என்ற இலக்கங்களே பணிக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், nahttfsrilanka@gmail.com என்ற மின்னஞ்சலும் பணிக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் கடுமையான இரகசியத்தன்மையுடன் கையாளப்படும் என்று தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு உறுதியளித்துள்ளது

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...