9 19
இலங்கைசெய்திகள்

தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் அமையும் : விஜித ஹேரத்

Share

தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் அமையும் : விஜித ஹேரத்

எதிர்வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை உள்ளதோடு, ஐக்கியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த அழைப்பு விடுக்கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மௌன காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம் புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...