7 20
உலகம்செய்திகள்

ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

Share

ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி வரி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற நாடுகள் இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிற்க்கே அதிகப்படியாக ஏற்றுமதி செய்கின்றன.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை அறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரி விதிக்கப்படுமானால் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் 0.2% இழப்பு முதற்கட்டமாகவே ஏற்படும் என நம்பப்படுவதோடு நிலைமை தொடருமானால் 1% வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனாவிலிருந்து (China) அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60% வரியும் ஜேர்மனியிலிருந்து (Germany) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரியும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தானியங்கி துறை மற்றும் மருந்தகத் துறை உள்ளிட்ட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஜேர்மன் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், பிரித்தானியாவிற்கு (UK) மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...