2 20
இலங்கைசெய்திகள்

2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு

Share

2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில உணவு மற்றும் பானங்களின் வற் மற்றும் வருமான வரி நியாயமான தொகையால் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட தொடர் மக்கள் பேரணியின் இறுதிப் பொதுக்கூட்டம் கம்பஹாவில் நடைபெற்றது.

அதன் போது, டிசம்பரில் 04 மாத காலத்திற்கான குறைமதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் புதிய வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சில உணவு மற்றும் பானங்கள் மீதான வற் வரியை முற்றாக நீக்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...