2 18
உலகம்

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

Share

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

நில விவகாரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அரசு அதிகாரியை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானாவில், விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினும் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய கிராம மக்கள் கடைசியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தினர்.

பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்தில் ஏறி ஆட்சியர் கிளம்ப முயன்றார். அப்போது, அவர் ஏறிய வாகனத்தை கற்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆட்சியரின் வாகனம் சேதம் அடைந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...