6 17
சினிமாசெய்திகள்

பொத்துஹெர – ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை: விஜித ஹேரத் விடுத்த பணிப்புரை

Share

பொத்துஹெர – ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை: விஜித ஹேரத் விடுத்த பணிப்புரை

பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளை விரைவில் முடிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக நேற்று(09.11.2024) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த வீதிப் பிரிவின் தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார்.

210 பில்லியன் ரூபா செலவில் 32.4 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட இந்த திட்டமானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...