2 1 2
இலங்கைசெய்திகள்

அறுகம் குடா பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

Share

அறுகம் குடா பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (Sampath Thuyacontha) அறுகம் குடா(Arugam bay)பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இன்று(10.11.2024) அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அறுகம் குடா பகுதியிலுள்ள பல சுற்றுலா தளங்களில், இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, தாக்குதல் தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதால், அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள், அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளை முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு செயலாளர் அறுகம் குடா பகுதிக்குக் கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...