2 1 2
இலங்கைசெய்திகள்

அறுகம் குடா பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

Share

அறுகம் குடா பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (Sampath Thuyacontha) அறுகம் குடா(Arugam bay)பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இன்று(10.11.2024) அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அறுகம் குடா பகுதியிலுள்ள பல சுற்றுலா தளங்களில், இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, தாக்குதல் தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதால், அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள், அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளை முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு செயலாளர் அறுகம் குடா பகுதிக்குக் கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...