7 6
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது: முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம்

Share

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது: முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம்

ஜேர்மனியில், ஆளும் கூட்டணி உடைந்ததால், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஜேர்மனியில், SPD, Alliance 90/The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

இந்நிலையில், கூட்டணிகளுக்குள் கொள்கை கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. ஜேர்மன் அரசில் FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindner நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

அவருக்கும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, திடீரென Christian Lindnerஐ அவரது பதவியிலிருந்து நீக்கியுள்ளார் சேன்ஸலர்.

அதைத் தொடர்ந்து, FDP கட்சி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது.

ஆகவே, ஷோல்ஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அது ஜேர்மனியில் முன்கூட்டியே தேர்தலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ஆட்சி மாறி ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளதன் தாக்கத்தை ஜேர்மனி எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்ததற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர் ஷோல்ஸ்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...