26 2
இலங்கைசெய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி

Share

கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த, ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த 23 வயதான நுவங்கி இந்துனில் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...

gold price6 1672379756
செய்திகள்இலங்கை

தங்க விலையில் திடீர் ஏற்றம்: பவுணுக்கு ரூ. 6,000 அதிகரிப்பு!

கடந்த வாரத்திலிருந்து எவ்வித மாற்றங்களும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை,...