23
இலங்கைசெய்திகள்

சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை

Share

சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe ) கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பில் பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் வீட்டில் இல்லாத போது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக குற்றம் சுமத்தி சுஜீவ சேனசிங்கவினால் குருந்துவத்தை பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe )கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டுக்கு, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சென்று இன்று(05.11.2024) அவசர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்றபோது சுஜீவ சேனசிங்க வீட்டில் இல்லை எனவும், வேலைக்காரர் மட்டும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...