11 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் மருத்துவத் துறையில் உருவாகியுள்ள புதிய சிக்கல்

Share

நாட்டில் மருத்துவத் துறையில் உருவாகியுள்ள புதிய சிக்கல்

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் (Sodium bicarbonate) ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகளானதே சோடியம் பைகார்பனேட் தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை எவ்வித அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் வினோதனி வணிகசேகர, “நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைக்கு இந்த மருந்து தேவை. சிக்கல்கள் ஏற்பட்டால், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது சோடியம் பைகார்பனேட் தேவைப்படுகிறது.

இது நோயாளிகளின் இரத்தத்தில் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.

எனினும், அன்றாட தேவைக்கு பயன்படும் மருந்து அல்ல.ஆனால் இக்கட்டான சூழ்நிலைகளின் போது, ​​​​அது அவசியமாகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...