12 27
இலங்கைசெய்திகள்

காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட : ஆரம்பமானது விசாரணை

Share

காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட : ஆரம்பமானது விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட(prageeth Eknaligoda) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கிரிதல இராணுவ முகாமின் முன்னாள் தளபதி ஷம்மி குமாரரத்ன மற்றும் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று முன்தினம் (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பமானது.

 

உயர் நீதிமன்ற நீதிபதி கலாநிதி நாமல் பலாலே தலைமையிலான நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இரண்டு பிரதான தொலைபேசி நிறுவனங்களின் அதிகாரிகள் இருவர், கடத்தலின் போது குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.

 

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோர், பாதுகாப்பு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகளாவர்.

 

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாக ஏற்றுக்கொண்ட போதிலும், தொலைபேசி கோபுரங்கள் தொடர்பான முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட வரைபடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

 

அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க தலைமையில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் சாட்சியமளித்ததையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை டிசம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...