9 36
சினிமாசெய்திகள்

அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

Share

அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4 இப்படத்தில் இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.

2024 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படமாக அரண்மனை 4 அமைந்தது. அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.

அதனால் அரண்மனை 4 – ம் பாகத்தில் வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்டார்.

அதனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் 5 – ம் பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அரண்மனை 5 குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, அரண்மனை 5 படத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் எனவும் தகவல் வெளியானது.

தற்போது, அரண்மனை 5 குறித்து வெளியான தகவல் பொய்யானது என கூறி நடிகை குஷ்பு சுந்தர் அவரது இன்ஸ்டா பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரண்மனை 5 படம் குறித்து பொய்யான தகவல் பரவி வருகிறது அதிகாரப்பூர்வ தகவல் இயக்குனர் மூலம் அல்லது தயாரிப்பாளர் மூலம் தான் வெளிவரும் அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...