3 41
இலங்கைசெய்திகள்

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

Share

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டமை தொடர்பான தகவல்களுடன், வெளிநாடுகளின் பயண எச்சரிக்கை ஆலோசனைகளை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் (Sri Lanka Government) வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வெளிநாடுகளின் ஆலோசனைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அகற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் குறித்து, அரசாங்கத்திற்கு உளவுத்துறை கிடைத்ததிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை, எனினும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்களுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடுகளின் பிரஜைகளுக்கான பாதுகாப்பு குறித்து இலங்கை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று...

25 68f722fb6bd68
செய்திகள்இலங்கை

முதலமைச்சர் வேட்பாளர் ஆசை! பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் தயார் என தகவல்!

அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...

pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...