5 44
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு

Share

தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி தேர்தலுக்காக இடம்பெற்ற பிரசார மேடைகளில் தேசிய மக்கள் சக்தியானது படுகொலைகள், நீதி விவகாரங்கள், அரச ஊழல் தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தியிருந்தது.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அவ்வாறான தவறுகளுக்கு நீதி நிலைநாட்டப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மேடைகள் எங்கும் உறுதிமொழிகள் எதிரொலித்தன.

அந்த வகையில், தற்போது ஆட்சிபீடத்தை அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றியுள்ள நிலையில், மேடைகளில் முன்வைத்த உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சி தரப்புக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டுக்கள் சமூகத்தின் மத்தியிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், இலங்கை அரசியலில் எதிர்கால திட்டமிடல்களை அநுர அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பான சில விளக்கங்களை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பொது தேர்தல் வேட்பாளர் நாராயணன் பிள்ளை சிவனந்தராஜா வழங்கியுள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி சட்டத்தை ஒரேபாதையில் நகர்த்தும் எனவும், எதிர்பாராத கைதுகளை மேற்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...