4 43
இலங்கைசெய்திகள்

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர

Share

ரணிலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்களை மறுத்துள்ள, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார, பல்வேறு செலவினங்களுக்கான மேலதிக நிதி, வரவு செலவுத் திட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் கணக்கு வாக்கெடுப்பு மூலம் நிதி ஒதுக்கப்படுவது வழமையாகும்.

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம், ரணில் விக்ரமசிங்கவினால் அவசரமாக எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம், செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னதாக செப்டம்பர் 3 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

எனினும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...