உலகம்செய்திகள்

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல தசாப்தங்களாக நடைபெற்ற காலநிலை பேச்சுவார்த்தைகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முன்னேற்றமும் இருந்த போதிலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 3.1°C என்ற பேரழிவுகரமான வெப்பநிலை உயர்வுக்கு நாம் நெருங்கி வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு இடைவெளி அறிக்கையில், பசுமை வாயு வெளியீடுகள் 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டியதையும் மற்றும் வளர்ச்சியின் விகிதம் பெருந்தொற்றுக்கு முந்திய காலத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதும் மற்றும் நாடுகள் தீவிரமான காலநிலை நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தாததுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அத்தோடு, தற்போதைய போக்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C இலக்கை நிறைவேற்றுவதற்கு உலகை மிகுந்த போராட்டத்திற்கு இட்டுச் செல்வதாக சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...