7 35
உலகம்செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Share

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவிலுள்ள (Canada) பிராம்ப்டன் நகரில் சர்வதேச மாணவர்கள் உடல் ரீதியான வன்முறைக்கும் மனிதக் கடத்தலுக்கும் உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது தொடர்பில், பிராம்ப்டன் நகரின் மேயர் பாட்ரிக் பிரவுன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த குற்றச்செயல்கள் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் தெரியப்படுமாறு நடக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

 

எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

பிராம்ப்டன் நகரில், குறிப்பாக இளம்பெண் மாணவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்களே குறித்த வன்முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் பல முறைகள் மாணவர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அரசு அதிகாரிகளால் இந்த விடயயம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், பிராம்ப்டன் நகரிலுள்ள சர்வதேச மாணவர்கள் புலமைபரிசில்கள் மற்றும் குறைந்தளவு செலவிலான வசதிகள் மூலமாகவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...