6 38
உலகம்செய்திகள்

புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கப்போகும் கனடா

Share

புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கப்போகும் கனடா

பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனடா 2024இல் 485,000ஆக உள்ள நிரந்தர புலம்பெயர்வோர் எண்ணிக்கையை 2025இல் 395,000ஆக குறைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், அந்த எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகவும் 2027இல் 365,000 ஆகவும் குறைக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்க தரப்பை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025இல் சுமார் 30,000ஆக குறைக்கப்பட்டு 300,000ஆக இருக்கும் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 46
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட அதன் உயர்மட்ட...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதாரச் சீர்திருத்தங்களில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியமானது: ஐஎம்எஃப் பிரதிநிதிகளிடம் சபாநாயகர் உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுக் குழுப் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கையாக,...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருவளை கடலில் 6.2 பில்லியன் ரூபா ஹெராயின் மீட்பு: 6 மீனவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பேருவளை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் கைது...

Untitled 43
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் வளர்ச்சிக்கு உலக வங்கி பாரிய நிதியுதவி: 7% பொருளாதார வளர்ச்சியை எட்ட புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தவும், நடுத்தர காலத்தில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய...