8 35
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

Share

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன்பின் அர்னவ் எலிமினேட் ஆனார். ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என துவங்கிய பிக் பாஸ் 8, தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரி குறித்து பேச துவங்கிவிட்டனர். இப்படியிருக்க இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என கூறப்படும் நிலையில், அதில் ஒருவராக ஸ்வாகதா என்பவர் வரலாம் என கூறப்படுகிறது. ஸ்வாகதா பின்னணி பாடகி ஆவார்.

மேலும் கடந்த பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவருக்கும் நினைவு இருக்கும். அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....