8 35
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

Share

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன்பின் அர்னவ் எலிமினேட் ஆனார். ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என துவங்கிய பிக் பாஸ் 8, தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரி குறித்து பேச துவங்கிவிட்டனர். இப்படியிருக்க இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என கூறப்படும் நிலையில், அதில் ஒருவராக ஸ்வாகதா என்பவர் வரலாம் என கூறப்படுகிறது. ஸ்வாகதா பின்னணி பாடகி ஆவார்.

மேலும் கடந்த பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவருக்கும் நினைவு இருக்கும். அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...