23 16
இலங்கைசெய்திகள்

சாணக்கியன் ஒரு தௌவல்: ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு

Share

சாணக்கியன் ஒரு தௌவல்: ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு

சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் “இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளரான பா.அரியநேத்திரனை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது.

அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

எனவே, அவரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கூடாது என சாணக்கியன் கூறியுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்ன என வினவியவேளை அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரசார மேடையில் யாரும், யாருக்காகவும் பேசலாம், யாருக்கும் ஆதரவு வழங்கலாம். இன்று சிறிநேசனும் சாதாரண ஆள் தான், சாணக்கியனும் சாதாரண ஆள் தான், நானும் சாதாரண ஆள் தான். எனக்கு ஆதரவாக கடந்த காலங்களில் விடுதலை போராளிகள் மேடையேறி பேசினார்கள், இனியும் பேசுவார்கள்.

அந்தவகையில் அரியநேத்திரன் யாருக்கு ஆதரவாகவும் பேசலாம். எனவே கட்சிக்கும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும், பிரசார நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிறீதரன் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதெல்லாம் இனி வருடக்கணக்கில் கிடப்பில் போடப்படும். ஏனென்றால் இதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. தமிழரசு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் தமக்கு ஏற்ற நேரத்தில் ஒரு வருடத்திலும் முடிப்பார்கள், 10 வருடத்திலும் முடிப்பார்கள்.

எனவே, இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அரியநேத்திரனுக்கு எல்லா ஜனநாயக உரிமைகளும் உள்ளன. எந்த மேடையிலும் ஏறி யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யலாம், இது கட்சி மேடை அல்ல” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...