20 18
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு

Share

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு

இலங்கை முழுவதும் பல பகுதிகளுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பின் பேரில், பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

 

எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை 1997 இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

 

மேலும், மற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு அடிக்கடி வரும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

கொழும்பு, அறுகம்பை, வெலிகம, பண்டாரவளை, எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளில் ஏற்பட்ட போர் நெருக்கடி காரணமாக இலங்கையில் பழி தீர்க்கும் செயற்பாடுகள் இடம்பெறலாம் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இன்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...