8 33
இலங்கைஏனையவைசெய்திகள்

மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

Share

மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் “Airline Ratings” மீண்டும் உயர்த்தியுள்ளது.

அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஒருவர் விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.

விமானம் பறக்கும் போது துணை விமானி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, பிறகு கேப்டன் விமானி கதவை திறக்கவில்லை.

விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...