2 33
இலங்கைஏனையவைசெய்திகள்

நாமல் – சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

Share

நாமல் – சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது அடுத்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழர் தரப்பிலும் மற்றும் தென்னிலங்கை தரப்பிலும் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியல் என்ற பின் கதவால் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துகொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

இதில் முக்கிய பங்காளராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) தெரிவிக்கலாம்.

காரணம், அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர்.

இந்தநிலையில், அரசியலில் இவ்வாறு தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர், தனது தோல்வி குறித்த அச்சத்தினால் தமிழரசுக்கட்சியில் தந்திரமாக காய் நகர்த்தும் சுமந்திரனை (M. A. Sumanthiran) போலவே தேசிய பட்டியல் எனும் பின் கதவில் கைவைத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியை பொருத்தவரையில் தேசிய பட்டியலில் ஒருவருக்கு மாத்திரமே இடம் கிடைக்க கூடும் என்ற நட்பாசை இருந்தாலும் அந்த ஒருவராக தானே இருக்க வேண்டும் என்ற கணிப்பில் சுமந்திரன் சில வியூகங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

இந்தநிலையில், சுமந்திரனை போல தந்திரமாக நாமல் செயற்ப்பட்டாலும் நாமலுக்கு கிடைக்கும் வாய்ப்பு சுமந்திரனுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குரியே.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...