co murder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பின் இருவேறு இடங்களிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்பு

Share

கொழும்பு – களனிப் பாலத்திற்கு கீழிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. தொடவத்தை சேதவத்தை கறுப்பு பாலத்திற்கு அருகில் அடையாளம் காணப்படாத நிலையில், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் குறித்த பெண்ணின் சடலம் அந்தப்பகுதியிலேயே காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற கிரான்ட்பாஸ் பொலிசார், குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று அதிகாலை தொடகல விக்ரோரியா பாலத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருடைய சடலங்கள் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் அமல் ஜெயமான்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...