5 31
இலங்கைசெய்திகள்

மாயமான முன்னாள் அமைச்சர்: விசாரணைகள் தீவிரம்

Share

மாயமான முன்னாள் அமைச்சர்: விசாரணைகள் தீவிரம்

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு BMW காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பல குழுக்கள் மூன்று நாட்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் வசிக்கும் அனைத்து வீடுகள் மற்றும் இடங்களை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

குறித்த கார் பதிவு செய்யப்படாதது மற்றும் போலியான இலக்கத் தகடு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காரை, இரகசிய காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்ததில், ‘டாக்சி அபே’ என்ற பெயரில் கார் அங்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சில ஆவணங்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில், பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெற வருமாறு ஜோன்ஸ்டனுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் சுகவீனமாக இருப்பதாகக் கூறி அவர் முன்னிலையாக தவறியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...