5 31
இலங்கைசெய்திகள்

மாயமான முன்னாள் அமைச்சர்: விசாரணைகள் தீவிரம்

Share

மாயமான முன்னாள் அமைச்சர்: விசாரணைகள் தீவிரம்

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு BMW காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பல குழுக்கள் மூன்று நாட்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் வசிக்கும் அனைத்து வீடுகள் மற்றும் இடங்களை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

குறித்த கார் பதிவு செய்யப்படாதது மற்றும் போலியான இலக்கத் தகடு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காரை, இரகசிய காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்ததில், ‘டாக்சி அபே’ என்ற பெயரில் கார் அங்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சில ஆவணங்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில், பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெற வருமாறு ஜோன்ஸ்டனுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் சுகவீனமாக இருப்பதாகக் கூறி அவர் முன்னிலையாக தவறியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...